×

மல்லிகைப்பூ வரத்து குறைவு: சங்கரன்கோவில், தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!!

தென்காசி: மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால் சங்கரன்கோவில் மலர் சந்தையில் கிலோ ரூ.3,000-க்கு மல்லிகை விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ வரத்து குறைந்து தேவை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோல் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ ரூ. 2000க்கும், ரூ.500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post மல்லிகைப்பூ வரத்து குறைவு: சங்கரன்கோவில், தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Thovalai ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு